தென்மராட்சி பிரதேச செயலகத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரத்தை பெற்ற 2500 CC க்கு உட்பட்ட வாகனங்களுக்கு நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை டீசல் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன் போது க்யூ ஆர் கோட் கவனத்தில் கொள்ளப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை டீசல் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்ட கிராம அலுவலர்களுக்கும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், சமுத்தி உத்தியோகத்தர்களுக்கும், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெற்றோல் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments