முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை எடுத்ததுடன் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குளிர்பானங்களை வழங்கி வைத்தனர்.
முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை QR கோர்ட் நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது , கர்ப்பிணி பெண்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகித்ததுடன் , வரிசையில் காத்திருந்த மக்களுக்கு உரிமையாளர் குளிர்பானங்களையும் வழங்கினார்.
அதேவேளை , " தொடர்ந்து எமது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கிடைக்கவுள்ளமையால் மக்களுக்கு சீரான விநியோகத்தை முன்னெடுத்து மக்களின் பெரும் சிரமத்தை குறைக்க முடியும் என நம்புகிறேன் என முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மயில்வாகனம் ஸ்ரீதாசன் தெரிவித்தார்.
No comments