Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் பெட்ரோல் பெற காத்திருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை பெட்ரோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். 

புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கான பெட்ரோலை பெற்றுக்கொள்ள தனது QR குறியீட்டை காண்பித்த நிலையில் , மோட்டார் சைக்கிளுடன் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். 

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்திய சாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்துள்ளார். ஆரம்ப கட்ட வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில் உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது. 

No comments