இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவரை விளக்கமறியல் தடுத்து வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அவரை இன்றைய தினம் பிணையில் நீதிமன்று விடுத்துள்ளது.
No comments