சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையத்தினால் தொடர்ச்சியான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மாகாணத்தில் உள்ள மதகுருமார்களுக்கு காலை 9.00 மணியிலிருந்து 4.30 மணி வரை பெட்ரோல் விநியோகம் இடம்பெறுமென எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரும் அனைவரும் QR Code மற்றும் தாங்கள் வசிக்கும் கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை அல்லது வதிவிடத்தை உறுதிப் படுத்தும் ஏதாவது ஒரு ஆவணத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென தெரிவித்தார்.
No comments