மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகளை மே மாதம் 10 ஆம் திகதி தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் ஏதும் தெரிந்தால் 071 8591735, 071 8592735, 071 8591733 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மே மாதம் 10 ஆம் திகதி குழு ஒன்றினால் கொழும்பு - கங்காராம விஹாரைக்கு அருகில் தாக்கப்பட்டதில் அவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments