Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.பல்கலை முன்னாள் தலைவர் செயலாளரை வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் உறுதி!


கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரையும், செயலாளரையும் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கு என்னாலான முயற்சிகளில் இறங்குவேன் என்றும், வழங்கின் தற்போதைய நிலை தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசுவேன் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த யாழ். பல்கலைக் கழக மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார். 

யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வமாக வருகை தந்துள்ள கல்வி அமைச்சர்,  யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். 

அதன் போதே மாணவர்கள் முன் வைத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் 

 தெற்கில் முன்னைய காலத்தில் இவ்வாறே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக  மாணவர்கள் வன்முறைகளின் போது கைது செய்யப்பட்டிருந்தனர்.  அவர்கள் அனைவரும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். 

அதே போல இவர்களிருவரையும் விடுவிப்பதற்கான ஏதுநிலைகள் பற்றி சட்டமா அதிபருடன் கலந்துரையாடுகிறேன். இங்கிருந்து கொழும்புக்குச் சென்றதும் உடனடியாகவே இதற்கான நடவடிக்கைகளில் இறங்குவேன். 

நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாமல் செய்வது பற்றிச் சிந்திக்கப்படுகிறது. அது தொடர்பில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்றார்.

பின்னணி 

கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்தை இராணுவத்தினர் சோதனையிட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் படங்கள் மற்றும் தமிழீழ வரைபடங்கள் மீட்கப்பட்டன. 

இதனால் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம். திவாகரன் மற்றும் செயலாளர் எஸ்.பவுல்ராஜ்  ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இருவரும் தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள போதிலும் வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. 

No comments