Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தென்மராட்சி கமக்காரர்கள், நுணாவில் IOC யுடன் தொடர்பு கொள்ள கோரிக்கை!


தென்மராட்சியில் உள்ள  கமக்கார அமைப்புக்களை  தொடர்பு கொள்ளுமாறு  நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அறிவித்துள்ளார். 

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குள்  உள்ள கமக்கார அமைப்புக்களுக்கும் பெரும் போக நெற் பயிர்ச்செய்கைக்காக  டீசல் விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான டீசலை பெற்றுக்கொள்ளவே தம்மை தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

 தற்பொழுது மழை பெய்திருப்பதால் பெரும்போக நெற்செய்கைக்காக எரிபொருள் இல்லாது  விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள் அவர்களின் எரிபொருள் தட்டுப்பாட்டினை எம்மால் முடிந்தவரை நிவர்த்தி செய்வதற்கு முன்வந்துள்ளோம்.

அந்தவகையில் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் இருக்கும் கமக்கார அமைப்புக்கள் தம்முடன் தொடர்பினை ஏற்படுத்தி உங்கள் கமக்கார அமைப்புக்களின் ஊடாக பெரும் போக  நெற்பயிர்செய்கை மேற்கொள்ளும்  விவசாயிகளுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொடுக்க  முன்வாருங்கள் என தெரிவித்தார்.

அத்துடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரும் விவசாயிகள் தாங்கள் வசிக்கும் கிராம சேவர் பிரிவினை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை மற்றும்  QR Code கட்டாயம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

உரிமையாளரின் தொடர்புகளுக்கு,

தாெ.இல-: 0776668739

வைத்திலிங்கம் சிவராசா 

நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்

No comments