Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

விருந்தினர் விடுதிக்குள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் - இருவர் உயிரிழப்பு


அம்பலாங்கொட - தொல்துவ பகுதியில் உள்ள விருந்தினர் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர். கஹவா பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 35 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் பலாப்பிட்டிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த நான்கு நபர்களும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை விருந்தினர் விடுதியின் மேல் தளத்தில் இருந்தவேளை அதற்குள் புகுந்த துப்பாக்கிதாரி நால்வர் மீதும் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை அம்பலாங்கொட பகுதியில் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கி சூட்டு சம்பவம் இது எனவும் , இதற்கு முன்னர் நடந்த இரண்டு சம்பவங்களிலும் மூவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் காயமடைந்திருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments