பக்கவாதத்தால் படுக்கையில் இருந்த தந்தையை அடித்துக்கொன்றதுடன் , தந்தையை அடித்துக்கொலை செய்வதனை தடுத்த தாயார் மீதும் மகன் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.
கலுகிஸ்ஸ , கல்லுப்பர எனும் இடத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த வெலிகொட நோயல் டி. சில்வா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக படுக்கையில் இருக்கிறார். இந்நிலையில் இவரது மகன் நேற்றைய தினம் படுக்கையில் இருந்தவர் மீது தடி ஒன்றினால் மூர்க்கத்தனமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
கணவனை மகன் தாக்குவதனை அவதானித்து , மகனை தடுக்க முற்பட்ட தாயார் மீதும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தையை அடித்து கொலை செய்து , தாயார் மீதும் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸார் மகனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் ,அவரிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
No comments