Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வட்டுக்கோட்டையில் அம்புலன்ஸ் சாரதியை தாக்கிய குற்றத்தில் கைதானவர் மறியலில்!


நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து , நோயாளர் காவு வண்டி மூலம் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

அதன் போது வீதியில் நோயாளர் காவு வண்டியை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று இருந்தார். 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சாரதியை தாக்கியதாக இளைஞன் ஒருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

அதனை அடுத்து மன்று குறித்த இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. 

No comments