Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அடுத்தடுத்து உயிரிழந்த சகோதரர்கள் - அதிர்ச்சியில் குடும்பத்தினர் நால்வர் வைத்தியசாலையில்!


திடீரென உயிரிழந்த சகோதரனின் இழப்பினை தாங்க முடியாது சகோதரியும் உயிரிழந்துள்ளார். 

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 42 வயதுடைய நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியினால் உயிரிழந்துள்ளார். 

அவரின் மரண சடங்குகள் இடம்பெற்ற வேளை , துக்கம் தாங்க முடியாது அவரது 31 வயதான சகோதரி மயங்கி சரிந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர். 

இவர்களின் மரணங்களை அடுத்து , முன்னதாக உயிரிழந்தவரின் மகள் , மகன் , மைத்துனர் மற்றும் அத்தை ஆகியோர் அதிர்ச்சி யடைந்து சுகவீனமுற்ற நிலையில் களுத்துறை போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


No comments