Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வட்டுக்கோட்டையில் வீடு உடைத்து கவரிங் நகைகளை திருடிய திருடர்கள்!


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த கவரிங் நகைகளை களவாடி சென்றுள்ளனர். 

வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் தமது தொழில் நிமிர்த்தம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் வீட்டின் கதவினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் சல்லடை போட்டு தேடி வீட்டில் இருந்த ஒரு தொகை கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். 

தமது வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தமையை அவதனித்து உள்ளே சென்று பார்த்த போது , தமது கவரிங் நகைகள் அனைத்தும் திருட்டு போயுள்ளமையை அறிந்துள்ளனர் வீடு உடைக்கப்பட்டமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

No comments