Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இருபாலையில் புலிகளின் புதையல் ?


யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலின் அடிப்படையில் புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரி இருந்தனர். 

நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்துள்ளதாகவும் , அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 





No comments