திருகோணமலையில் 14 வயதுடைய சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் கைதான 17 வயது சிறுவனை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தனது 14 வயதுடைய மகளை காணவில்லை என தந்தை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியை கண்டு பிடித்தனர்.
அதனை அடுத்து சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்தினர்
அதேவேளை சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் 17 வயதான சிறுவனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை தொடர்ந்து சிறுவனை 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments