மாகல்கந்த கடலில் நீராட சென்ற மூவர் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மாகல்கந்த பகுதியை சேர்ந்த 17, 18 மற்றும் 19 வயதுடைய மூவரும் இன்றைய தினம் காலை கடலில் நீராடிய வேளை , கடலில் அடித்து செல்லப்பட்டனர்.
அருகில் இருந்தவர்கள் மூவரையும் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். மற்றையவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
No comments