Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீதியில் கண்டெடுத்த கைச்செயினை மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள் - உரிமையாளரை கண்டறிந்து இளைஞர்கள் கைகளால் உரியவரிடம் ஒப்படைத்த பொலிஸ்


வீதியில் கண்டெடுத்த இரண்டு பவுண் தங்க கைச் சங்கிலியை பொலிசாரிடம் ஒப்படைத்த இளைஞர்களை பொலிஸார் பாராட்டியுள்ளதுடன் , கைச் சங்கிலியின் உரிமையாளரை கண்டறிந்து , அந்த இளைஞர்களின் கைகளினால் உரிமையாளரிடம் அதனை சேர்ப்பித்துள்ளார். 

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

சங்கானை பகுதியை சேர்ந்த ச. சபேஷ் (வயது 32), ர. றொபீகன் (வயது 20) மற்றும் ம. கோகுலன் (வயது 25) ஆகிய மூவரும் மாகியப்பிட்டி ஊடாக பயணித்த வேளை வீதியில் விழுந்து கிடந்த 2 பவுண் கைச் செயினை கண்டெடுத்து, அதனை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைச் செயினை தவறவிட்டவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தவேளை , மாகியப்பிட்டி பகுதியை சேர்ந்தவர் தனது கைச் செயினை தவறவிட்டதை தெரிவித்துள்ளார். 

அவரிடம் கைச் செயின் தொடர்பிலான அடையாளங்களை கேட்டறிந்து , அவருடையது தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பொலிஸார் , கைச் செயினை கண்டெடுத்து தம்மிடம் ஒப்படைத்த இளைஞர்களை அழைத்து பாராட்டி , அவர்கள் கைகளினால் உரிமையாளரிடம் அதனை கையளித்தனர். 


No comments