Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஊரெழுவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது - 200 லீற்றர் கோடா, 60லீற்றர் ஸ்பிரிட் மீட்பு!


யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் , 200 லீற்றர் கோடா, 60லீற்றர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.


யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு பொக்கணை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  இன்றைய தினம்  அதிகாலை கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்கள், கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

No comments