Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் ஹெரோயினுடன் கைதான பெண் விளக்கமறியலில்!


யாழ்ப்பாணம்  கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கையிட்டனர்.

சந்தேக நபர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில்  முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்க முடியாது என சுட்டிக்காட்டிய மன்று எதிர்வரும் 21ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

No comments