Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் விசேட அணி!


வடமாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் முப்படையினர்,  பொலிசார் மாவட்ட செயலர்கள்  மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோரை இணைத்து ஒரு அணியை உருவாக்க உத்தேசித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் , 

வடபகுதியில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஒரு விசேட அணியை உருவாக்க உத்தேசித்துள்ளோம்.

போதைப் பொருள் பாவனை சமூகம் மட்ட பிரச்சினையாக மாறிவிட்டது. எனவே அதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதனை கட்டுப்படுத்த ஒரு விசேட அணி ஒன்றினை உருவாக்கி அந்த அணியின் மூலம் வடபகுதியில் எவ்வாறு போதைப்பொருள் விநியோகிக்கப்படுகின்றது? போதைப் பொருள் விநியோகத்தர்கள் யார்? அவர்களுக்கு எவ்வாறு போதை பொருள் கிடைக்கின்றது? எங்கிருந்து வடபகுதிக்கு போதைப்பொருள் கொண்டுவரப்படுகின்றது? போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த விடயம் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் முப்படையினர், பொலிசார்,  மாவட்ட செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோரை இணைத்து,  ஒரு அணி ஒன்றினை உருவாக்கி போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments