கர்ணன் படைப்பகத்தின் கலை மற்றும் சமூகப்பணியின் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி சிவபாத கலையகம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் கர்ணன் படைப்பகத்தின் நிர்வாக இயக்குனர் சபேசன் சண்முகநாதன் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார்.
போர் வடுக்களில் இருந்து இன்னமும் முழுமையாக வெளிவராத பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கும் இவ்வாறான வாழ்வாதார உதவிகள் தொடரும் என அங்கு அவர் குறிப்பிட்டார்.
No comments