Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்!


யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின் தந்தை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

ஒஸ்மானியா கல்லூரிக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன் , சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருந்தனர். 

இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தேகநபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். 

அதேவேளை , சந்தேக நபரை கைது செய்யவேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் இன்றைய தினம் கற்பித்தல் செயற்பாடுகளை புறக்கணித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments