Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வல்லை பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்தவரை தேடும் பணிகள் தொடர்கின்றன!




யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது.

புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் லக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார். 

குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லை பாலத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர். 

அதன் போது இளைஞன் பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்துள்ள நிலையில் இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.


No comments