பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், யுவதியொருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க குணதிலக்க பயணித்தபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.
அதனால் அவருக்கு பதிலாக அஷேன் பண்டார உத்தியோகபூர்வமாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட போதிலும் தனுஷ்க குணதிலக்க தொடர்ந்தும் அணியுடன் இணைந்தே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments