ஹிக்கடுவ - வேவல பிரதேசத்தில் இன்றைய தினம் புதன்கிழமை காலை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் புகுந்த இருவர், கணவன் மற்றும் மனைவி மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த மனைவி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காரில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments