Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விதிமுறைகளை மீறி பால் மா இறக்குமதி


சுங்கத்தில் வைக்கப்பட்டிருந்த 6 பால் மா கொள்கலன்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை மீறி குறித்த பால் மா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பால் மாவை இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில் இறக்குமதியாளர்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த பிரச்சினை காரணமாக இந்த நாட்டில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

No comments