தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்காக வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, தாயக விடுதலைக்காக உயிர்நீத்த எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார்.
No comments