Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சுன்னாகத்தில் மின் மோட்டர்களை திருடிய குற்றத்தில் மூவர் கைது!


யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இரண்டு மின் மோட்டர்களை திருடிய குற்றத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , திருடப்பட்ட மோட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன. 

சுன்னாகம் ஈவினை பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்து 4 இலட்ச ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் மின் மோட்டர்கள் இரண்டு களவாடப்பட்டு இருந்தன. 

அவை தொடர்பில் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , ஈவினை பகுதியை சேர்ந்த 18 , 21 மற்றும் 25 வயதுடைய மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருடப்பட்ட இரண்டு மின் மோட்டர்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments