கோலாட்டத்தின் போது தவறு இழைத்ததாக கோலாட்ட தடியால் மூன்று வயதான முன்பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார். அதன் போது மாணவன் ஒருவன் தவறு இழைத்ததாக கூறி ஆசிரியர் கோலாட்ட தடியால் மூன்றே வயதான மாணவனை மோசமாக தாக்கியுள்ளார்.
அதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவனின் பெற்றோரினால் , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து , மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் 36 வயதான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments