முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இறால் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு, இரணைப்பாலையை சேர்ந்த செ.நிசாந்தன் (வயது 26)என்ற இளைஞனே கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இவரை தேடும் நடவடிக்கை கடல் சீற்றம் காரணமாக தாமதமாவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments