கிளிநொச்சியில் வீடொன்றில் இருந்து துப்பாக்கி மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பளை பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி மற்றும் வாள் என்பன உள்ளதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டு இருந்தனர்.
அதன் போது வீட்டினை சோதனை செய்த போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் வாள் மற்றும் துப்பாக்கி என்பன மீட்கப்பட்டன.
அதனை அடுத்து வீட்டில் இருந்த நபரை பொலிஸார் கைது செய்து பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
No comments