Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு


கபிதிகொல்லேவயில் இடம்பெற்ற போராட்டத்தின்போது, உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் அகம்பொடிகே சுனிலுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அகம்பொடிகே சுனிலுக்கு பொலிஸ் சார்ஜன்ட் பதவியில் இருந்து உப பொலிஸ் பரிசோதகராக குறித்த பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கபிதிகொல்லேவ, ரம்பகெப்பு குளம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி மதியம் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற கபிதிகொல்லேவ பொலிஸ் சார்ஜன்ட் பிரதேசவாசிகளின் தாக்குதலில் உயிரிழந்தார்.

குறித்த அதிகாரியின் இறுதிக் கிரியைகள் நாளை வாரியபொல சுமங்கல பொது மயானத்தில் பூரண பொலிஸ் மரியாதையுடன் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments