Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேகநபர்களை மீட்டு சென்ற உறவினர்கள்!


கோப்புப்படம். 
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் , பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர்கள் இருவரை மீட்டு சென்றுள்ளனர். 

அங்குலான பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கைத்தொலைபேசி தொடர்பில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கினை அடுத்து இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தீர்வு கோரியுள்ளனர். 

அதன் போது, அங்கும் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமைக்கும் இடையூறு ஏற்படுத்தி இருந்தனர். அதனை அடுத்து இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தனர். 

இதனை அறிந்த கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு , தடுத்து வைக்கப்பட்டு இருந்த இருவரையும் மீட்டு தம்முடன் அழைத்து சென்றுள்ளனர். 

உறவினர்களால் அழைத்து செல்லப்பட்ட இரு சந்தேக நபர்களும் , சிறிது நேரத்தில் மீள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

No comments