Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி காயம்!


இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் வாகன விபத்தில் காயமடைந்துள்ளார்.

ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்ல டெல்லியில் இருந்து காரில் சென்றுள்ளார்.

இதன்போது, உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவரது கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்ததுள்ளது.

பின்னர் பண்ட் காரின் கண்ணாடியை உடைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது ரிஷப் பந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மேக்ஸ் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சக்ஷாம் மருத்துவமனையின் தலைவர் டொக்டர் சுஷில் நகர் தெரிவித்துள்ளார்.

No comments