வலி. மேற்கு பிரதேச சபையில் புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கியானது இன்றையதினம் உத்தியோகபூர்வ திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச சபைக்கு சேவை பெற வருகின்ற விசேட தேவையுடையவர்களது நலனை கருத்தில் கொண்டு இந்த மின்தூக்கி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments