Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்னாரில் பொலிசாரின் வாகனத்துடன் விபத்துக்களான இளைஞன் உயிரிழப்பு


தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் கன்பியூசியஸ் விஜய் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார். 

மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பொலிஸ் வாகனத்தின் சாரதியான பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments