காலி - உனவட்டுன பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்கு உள்ளானதில் , முச்சக்கர வண்டியில் பயணித்த சுற்றுலா பயணியான ரஷ்ய பெண் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
பெலியத்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரத்துடன் , பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
No comments