Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் இறந்தவரின் பெயரில் உறுதி முடிப்பு ; சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது!


யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இறந்தவரின் பெயரில் உறுதி முடித்து , காணி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஓட்டுமடம் பகுதியில் உள்ள 6 பரப்பு காணி ஒன்றின் உரிமையாளர் கடந்த 1988ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அந்த காணியை 2021ஆம் ஆண்டு உரிமையாளரால் ( உயிரிழந்தவர்) விற்கப்படுவது போன்று மோசடி ஆவணங்களை தயார் செய்து , காணியை 15 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் உறுதி எழுதிய சட்டத்தரணி , சாட்சி கையொப்பம் இட்டவர்கள் என சம்பவத்துடன் தொடர்ப்புடைய ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அதேவேளை சில வாரங்களுக்கு முன்னரும் உயிரிழந்தவரின் பெயரில் உறுதி முடித்து , காணி விற்பனை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments