Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறுநீரக கடத்தல் - பிரதான தரகர் கைது


சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட பிரதான தரகர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (05) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்குளி காஜிமாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சிறுநீரக விற்பனை மோசடியில் பிரதான தரகராக செயற்பட்டு சிறுநீரகங்களை வழங்கியவர்களை ஒருங்கிணைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (06) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

No comments