யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் ஒளி விழா இன்றைய தினம் வியாழக்கிழமை பாடசாலை யோகர் சுவாமி மண்டபத்தில் காலை 11மணியளவில் நடைபெற்றது .
கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்பணி தே.ரவிராஜ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன்
பாடசாலை அதிபர் க.தவகீஸ்வரன் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் .
No comments