Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கல்லுண்டாயில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!


யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து மூன்றாவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் மாநகர சபை,  மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் இருக்கும் கல்லுண்டாய் பிரதேசத்தில் கழிவுகளை கொட்டி வருகிறது. அதனால் அந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் , அப்பகுதி மக்களுடன் இணைந்து மாநகர சபை தமது எல்லைக்குள் கழிவுகளை கொட்டக்கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் மூன்றாவது நாளாக  குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

No comments