Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். ஆலய நாக பாம்பை திருடிய குரங்காட்டி ; பக்தர்கள் மத்தியில் பெரும் கவலை


யாழ்ப்பாணம் தவசிக்குளம் கண்ணகை அம்மன் கோவிலில் இருந்த நாக பாம்பை ஒருவர் திருடி சென்றுள்ளமையால் , ஆலய பக்தர்கள் பலரும் மனக்கவலையுடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த ஆலயத்திற்கு அருகில் உள்ள பாம்பு புற்றோன்றில் நீண்ட காலமாக நாக பாம்பொன்று இருந்துள்ளது.அதற்கு ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் , குரங்கு ஒன்றுடன் , குரங்கு வித்தை காட்டும் நபர் ஒருவர் ஆலய சூழலுக்கு , வந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மத்தியில் குரங்கு வித்தை காட்டி , மகுடியும் வாசித்துள்ளார். 

அவ்வேளை புற்றில் இருந்து வெளியே வந்த நாக பாம்பினை பிடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

இது தொடர்பில் சிறுவர்கள் , பெரியவர்களிடம் சொன்ன போது , பாம்பினை பிடித்து சென்ற நபரை அவர்கள் அப்பிரதேசத்தில் தேடிய போதிலும் , அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

நீண்டகாலமாக தெய்வீக உணர்வுடன் வழிபட்டு வந்த நாக பாம்பு திருட்டு போனது , ஆலய பக்தர்கள் இடையில் பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

No comments