யாழ்ப்பாணம், நல்லூர் நாயன்மார் கட்டுக் குளத்திலிருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த செல்வத்துரை மகேஸ்வரி (வயது 56) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments