Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீட்டு தோட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு!


 பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் விவசாய ஆர்வத்தினை தூண்டும் வகையில் புதிய வெளிச்சம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுத் தோட்ட போட்டியில் வடமராட்சி பிரதேசத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மண்டபத்தில், பாடசாலை அதிபர்  T கலைச்செல்வன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த இயற்கை விவசாய பயிற்றுநர்களான பாமாயன் மற்றும் சுந்தரராமன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.








No comments