பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்திற்கு இரும்பு குழாய் ஒன்றினை எடுத்து சென்ற வேளை , குழாய் உயர் அழுத்த மின்கம்பியுடன் தொடுகையிட்டமையால் குழாயை எடுத்து சென்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பயிற்சி வகுப்பில் பணியாற்றி வந்த விமுக்தி தில்ஷான் பெரேரா (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குருநாகல் குளியாப்பிட்டி நகர மண்டபத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments