Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!


அலாஸ்காவில் உயரப் பறந்த அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை, அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இந்த பொருளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை போர் விமானத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி,

 ‘ஆளில்லாப் பொருள் ஒரு சிறிய காரின் அளவு. அது சிவிலியன் விமானப் போக்குவரத்துக்குஅச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக இல்லை.

தென் கரோலினா கடற்கரையில் கடந்த சனிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனை விட வெள்ளியன்று சுட்டு வீழ்த்தப்பட்ட பொருளின் சிதைவுகள் மிகவும் சிறியது.

அலாஸ்காவின் வடக்கு கடற்கரையில் 40,000 அடி (12,000 மீ) உயரத்தில் அந்த பொருள் பறந்து கொண்டிருந்தது.

இது ஏற்கனவே அலாஸ்கா முழுவதும் 20 முதல் 40 மைல் (மணிக்கு 64 கிமீ .வே) வேகத்தில் பறந்து, வட துருவத்தை நோக்கிப் பயணித்த கடலுக்கு மேல் இருந்தது, அது சுட்டு வீழ்த்தப்பட்டது.

வணிக விமானங்கள் 45,000 அடி உயரம் வரை பறக்க முடியும். பியூஃபோர்ட் கடலின் உறைந்த நீரில் இருந்து குப்பைகளை சேகரிக்க ஹெலிகொப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இது அரசுக்கு சொந்தமானதா அல்லது பெருநிறுவனத்திற்கு சொந்தமானதா அல்லது தனியாருக்கு சொந்தமானதா என்பது எங்களுக்குத் தெரியாது’ என கூறினார்.

No comments