Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, July 13

Pages

Breaking News

வலி வடக்கில் 33 வருடங்களின் பின்னர் 108 ஏக்கர் காணி விடுவிப்பு!


யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக  இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது. 

காங்கேசன்துறை மத்தி , ஜே/ 234 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட , வெளிச்ச வீட்டில் இருந்து துறைமுகம் வரையிலான 40 குடும்பங்களுக்கு சொந்தமான 26 ஏக்கர் காணியும் , இதே கிராம சேவையாளர் பிரிவில் , இராணுவத்தினரின் பொறியியல் பிரிவு அமைந்திருந்த 45 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியும் , மயிலிட்டி வடக்கு ஜே / 246 கிராம சேவையாளர் பிரிவில் 17 குடும்பங்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் காணியும் , அன்றோனிபுரம் பகுதியில் 13 ஏக்கர் காணியும் , நகுலேஸ்வரம் ஜே/ 226 கிராம சேவையாளர் பிரிவில் 20 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியும் நாளைய தினம் ஒப்படைக்கப்படவுள்ளது.