Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடவுச்சீட்டு சேவைகள் மீண்டும் ஆரம்பம்!


கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நியமனங்களை முன்பதிவு செய்தவர்கள் நாளை புதன்கிழமை திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை (15) நியமனங்களை முன்பதிவு செய்தவர்கள் வியாழக்கிழமை (16) திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று திங்கட்கிழமை கடவுச்சீட்டு வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதன்காரணமாக நேற்று கடவுச்சீட்டு பெறாதவர்களுக்கு இன்று மதியம் 12 மணிக்குப் பின்னர் கடவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளவர்களுக்காக எதிர்வரும் சனிக்கிழமை கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments