Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மல்லாகத்தில் வீடுடைத்து கொள்ளை - ஒருவர் கைது


யாழ்ப்பாணம் மல்லாக்கத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என தெல்லிப்பழை பொலிஸ் பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த  செவ்வாய்க்கிழமை மல்லாகத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால்  முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments