Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஆசியரின் பெயரை கூறி மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியவர் தொடர்பில் விசாரணை


யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி , அவரிடம் கல்வி கற்கும் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய நபர் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது , 

யாழ். வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவரின் பெயரை தொலைபேசியில் கூறி , தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நபர் ஒருவர் , மாணவி ஒருவருடன் ஆபாசமாக கதைத்து , ஆபாச குறுந்தகவல்களும் அனுப்பியுள்ளார். 

அது தொடர்பில் மாணவி பெற்றோரிடம் கூறியதை அடுத்து , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலைக்கு முன்பாக கூடி , குறித்த ஆசிரியரை வெளியே வருமாறு கோரி நின்றனர். 

அதனால் ஆசிரியர் பயம் காரணமாக பாடசாலையின் பின் பக்கத்தால் தப்பி சென்றார். அதற்கிடையில் அதிபரினால் , பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் போது மாணவிக்கு அழைப்பு எடுத்த தொலைபேசி இலக்கத்தை பெற்று அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தொலைபேசி "சிம்" அட்டை ஆசிரியரின் பெயரில் இல்லாமல் வேறு நபரின் பெயரில் எடுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த சிம்மை பெற்ற நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments